வியாழன், 14 ஜூலை, 2011

பாரதம்:மறைக்கப்பட்ட பெருமைமிகு வரலாறு

எழுதப்படாத வரலாற்றுக்கு முன்பிருந்தே,நமது பாரதநாடு செல்வச் செழிப்பின் உச்சத்தில் இருந்தது.அதற்கு அடையாளமாக,நமது நாட்டிற்கு வந்த வெளிநாட்டுப்பயணிகளான மார்க்கோபோலோ,யுவான் சுவாங் போன்றவர்களின் டைரிக்குறிப்பை எடுத்துப்படித்தாலே புரியும்.



இவர்களில் ஒருவர் ஒரு கிராமத்திற்கு சென்றார்.அங்கிருக்கும் ஒரு வீட்டின் வாசலில் நின்று கொண்டு குடிக்க தண்ணீர் கேட்கிறார்.அந்த வீட்டின் இல்லத்தரசி குடிக்க பானாக்கரம்(இனிப்பு கலந்த பானம்) கொண்டு வந்து தருகிறார்.இவரோ,தண்ணீர்தான் வேண்டும் என அடம்பிடிக்கிறார்.அந்த இல்லத்தரசியோ,வீட்டினுள் சென்று மோர் கொண்டு வந்து தருகிறார்.இவர் மீண்டும் தண்ணீர்தான் வேண்டும் என்கிறார்.அதற்கு அந்த இல்லத்தரசி, “ஆற்றில் ஓடுகிறதே,அங்கே போய் அருந்திக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு வீட்டினுள் சென்றுவிட்டார்.


பாரத தேசம் முழுவதும் அவர் சில ஆண்டுகள் சுற்றிப்பார்த்ததில்,எங்குமே வறுமை இல்லை;பிச்சைக்காரர்கள் இல்லை;பிச்சையெடுப்பவர்கள் சாதுக்கள்,துறவிகள் மட்டுமே.(தானம் தரும் எண்ணம் மறையக்கூடாது என்ற நோக்கத்திற்காக அவர்கள் பிச்சையெடுக்கின்றனர்).எந்த வீட்டிற்கும் கதவு கிடையாது.எனதனது பயண நூலில் எழுதியிருக்கிறார்.



போர்க்கலைப்படி,ஒரு படைவீரன் இன்னொரு படைவீரனிடம் மட்டுமே சண்டையிடவேண்டும்.ஒரு தளபதி இன்னொரு தளபதியிடம் மட்டுமே சண்டையிட வேண்டும்.எதிராளியிடம் எந்த ஆயுதமும் இல்லாவிட்டால்,அவனிடம் போரிடக்கூடாது.காலை சூரிய உதயத்திலிருந்து மாலை சூரிய உதயம் வரை மட்டுமே போரிட வேண்டும்.மதியம் சுமார் இரண்டு மணி நேரம் போர் இடைவேளை.போர் நடக்கும்போது,போரில் காயம் பட்டு வீழ்பவர்களை இரண்டு நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த முதலுதவி அணியினர் தூக்கிச் செல்லலாம்.யாரும் அவர்களை தாக்கக் கூடாது.(இந்த விதிகளை இன்றைய நாகரீக அரசாங்கங்கள் ஒன்றே ஒன்று மட்டும் பின்பற்றுகின்றனவா?)

ஒரு குழந்தையின் ஐந்து வயது முதல் 21 வயது வரையிலும் குருகுலத்தில் தங்கிப்படிக்க வேண்டும்.இந்த காலத்தில் ஒரு ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் மட்டும் தனது பெற்றோரின் வீட்டுக்குச் செல்லலாம்.ஒவ்வொரு ஆண் மற்றும் பெண் குழந்தைக்கும் வாள்பயிற்சி,பிராணயாமம்,சரக்கலை எனப்படும் மூச்சுக்கலை,ஜோதிடக்கலை,அர்த்த சாஸ்திரம் எனப்படும் அரசியல் கலை,ஆய கலைகள் 64,வேதங்களில் அதர்வண வேதம் தவிர்த்த அனைத்தும்,சாமுத்ரிகா லட்சணம்,16 வட்டார(இந்திய)மொழிகள்,சிலம்பம்,களரி முதலியன கற்பிக்கப்படும்(கி.பி.1900 வரையிலும் நமது தாத்தாவின் தாத்தா காலம் வரையிலும் நமது முன்னோர்கள் ஒவ்வொருவருமே 16 பாரத மொழிகளில் சரளமாகப் பேசத் தெரிந்திருந்தனர்.).கிபி1000 வாக்கிலிருந்து இந்த நிலை மாறத்துவங்கியது.ஆம்!





இஸ்லாமியப் படையெடுப்பு அப்போதுதான் துவங்கியது.அதன்பிறகுதான் ஜாதி வேற்றுமைகள் இஸ்லாமிய அரசுகளால் கட்டாயமாக திணிக்கப்பட்டன.காரணம் அவர்களின் மத நூலான குர் ஆன் சொல்லும் புனிதக்கடமைகளில் இந்த உலகம் முழுவதையுமே இஸ்லாமாக மாற்ற வேண்டும்.இன்று இந்தியாவில் வாழும் அனைத்து இஸ்லாமிய ஜாதிகளும் இந்துஜாதிகளே.அவற்றில் பெரும்பாலும் வால்முனையில் இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டவர்களே!






இதற்கான ஆதாரங்களை வந்தார்கள்,வென்றார்கள் என்ற நூலும் (எழுதியவர் ஆனந்த விகடனின் கார்டூனிஸ்ட் மதன்) மேலும் ஏராளமான ஆங்கில நூல்களும் விவரிக்கின்றன.




The Rising and Falling of Great Power என்ற நூலிலும் இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.இதை யேல் பல்கலைக்கழக பொருளாதாரப்பேராசிரியர் உலகம் முழுவதும் பயணித்து,பல நாடுகளின் ரகசிய மற்றும் பொது ஆவணங்களை ஆராய்ந்து தொகுத்து எழுதியிருக்கிறார்.கி.பி.1800 வரை முடிந்த இருபது நூற்றாண்டுகள் வரையிலும் (2000 ஆண்டுகள் வரையிலும்) பாரதமும்,சீனாவும் மாறி மாறி உலக வல்லரசு நாடுகளாக இருந்தன.இவற்றின் உலக பொருளாதாரப் பங்களிப்பு தலா 25% முதல் 35% வரை மாறிமாறி இருந்தன.


அமெரிக்கா வல்லரசாக மாறியதை பா.ராகவன் என்பவர் டாலர் தேசம் என்ற பெயரில் குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக எழுதினார்.அது தற்போது புத்தகமாகவே வெளிவந்துவிட்டது.உலகில் ஏதாவது இரண்டு நாடுகளிடையே போரினைத் தூண்டி,இரண்டு நாடுகளுக்கும் ஆயுதங்களை விற்றே வல்லரசு நிலையை அடைந்தது.அப்படி வல்லரசு நிலையை எட்டிட 400 ஆண்டுகள் ஆனது.முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களின் காலத்தில் போரில் ஈடுபட்ட நாடுகளுக்குத் தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ஆயுதத் தொழிற்சாலையாகவே அமெரிக்கா மாறியது.கொரியாப்போர்,வியட்நாம் போர்,வளைகுடா போர்,ஆப்கானிஸ்தான் போர் என வரலாற்றை கடந்த நூறு வருடமாக படித்துப்பார்த்தாலே உலக சகோதரிகளின் தாலிகளை அறுத்தே அமெரிக்காவின் கழுகுக்கொடி பட்டொளிவீசி ரத்த வாடை வீசுமளவுக்கு பறந்து வருகிறது.இதில்,பல ஹாலிவுட் படங்கள் அமெரிக்காவின் பெருமையை தூதூதூக்க்க்க்கி நிறுத்தும் விதமாக வெளியிடப்பட்டு வருகின்றன.இனி,இந்த பம்மாத்து வேலை எடுபடாது.




உலகின் மிகப்பெரிய அலுவலகம் எது தெரியுமா? அமெரிக்காவின் ராணுவத்தலைமையகம் பெண்டகன் தான்.அங்குதான் 26,000 பேர்கள் பணிபுரிகிறார்கள்..பெண்டகனையே ஒரு விமானம் தாக்கினால்!!!


அமெரிக்காவுக்கு எப்போதுமே மத வெறி உண்டு.உலகில் கத்தோலிக்க கிறிஸ்தவம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அதன் கனவு.அதற்காக இஸ்லாமிய மதத்தை அழிக்க என்ன செய்யலாம் என்றெல்லாம் ஏகப்பட்ட திட்டங்கள் போட்டுக்கொண்டே வந்தது.இவ்வளவு இருந்தும் இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவிடம் நல்ல நட்பு நாடாகவும் இருக்கிறது.என்ன ஒரு ஒற்றுமை!!!



நாம்,இங்கிலாந்திடம் அடிமைப்பட்டதிலிருந்தே நமது பெருமைகளை மறக்கடிக்க கத்தோலிக்க இங்கிலாந்து திட்டமிட்டது.இந்தியாவில் இங்கிலாந்து அழிவு வேலை பார்த்தது போல்,வேறு எந்த நாட்டிலும் வேலை பார்த்ததில்லை;இங்கிலாந்திலிருந்து குடியேறிவர்களால் உருவானதே அமெரிக்கா! அதனால்தான்,உலக அரங்கில்,ஐ,நா.சபையின் முக்கிய வாக்கெடுப்புக்களில் அமெரிக்கா என்ன செய்தாலும்,இங்கிலாந்து மறுப்பேயில்லாமல் ஏற்றுக்கொள்ளும்.இன்றைய நாள் படி (28.12.2010) ஒரு டாலருக்கு நிகரான நிஜமான ரூபாய் மதிப்பு ரூ.8/-மட்டுமே.இருந்தும் ஏன் ரூ.40 முதல் ரூ.50 வரையிலும் ஒரு டாலரின் நிலை நிலைத்து நிற்கிறது.இந்தியாவில் அமெரிக்காவின் ஏவலாளர்கள் இந்திய நிதித்துறை,பங்குச்சந்தை,ஆட்சிபீடம்,எதிர்க்கட்சிகளின் முக்கியபதவிகளில் நிரம்பியிருக்கிறார்கள்.




இந்துதர்மத்தின் பெருமைகளை கி.பி.1940கள் வரையிலும் அறிந்து பிரமித்த இங்கிலாந்து ஆளும் வர்க்கம் நம்மிடையே வெறுப்பை,ஜாதி வேறுபாட்டை,பகைமையை,நிரந்தரப்பிரிவினையை உருவாக்கியது.அதில் ஒன்றுதான் நம்ம கருணாநிதி தாத்தா அடிக்கடி சொல்லும் ஆரியர் திராவிடர் என்ற பிரிவினை வார்த்தைகள்.சுதந்திரம் பற்றிய வரலாற்றை ஊன்றி நாம் படிக்கவே நமக்கு ஒரு வருடம் ஆகும்.அதை படித்துவிட்டாலே புரிந்துவிடும் இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் வளர்ச்சிக்கு முதல் எதிரி என்று!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.