புதன், 13 ஏப்ரல், 2011

உணவு சங்கிலியில் பாதிப்பு ..


        60 கோடி மொபைல் போன்கள் உள்ளன. இதற்காக 5 லட்சம் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஏற்படும் மைக்ரோ வாய்ஸ் அதிர்வால் 30 சதவீத சிட்டுக்குருவிகள் அழிந்து விட்டன. சிட்டுக்குருவி, தேனீ உள்ளிட்டவை அழிந்து கொண்டே வருவதால், அயல் மகரந்த சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் உணவு உற்பத்தி குறைந்து வருகிறது. வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளும், சிட்டுக்குருவிகளுக்கு விஷமாக மாறி, அவைகள் உயிரிழக்க நேரிடுகிறது.தொடர்ந்து கட்டப்படும் கான்கிரீட் வீடுகளால் சிட்டுக்குருவிகளுக்கு கூடு கட்டுவதற்கு போதிய இட வசதி இல்லாததாலும் அவற்றின் இருப்பிடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

             சிட்டுக்குருவிகளை பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கையை பெருக்க மரத்தாலோ, மூங்கிலாலோ அல்லது மண் கலசங்கள் மூலமாகவோ சிட்டுக்குருவிகளின் கூடுகளை செய்து ஜன்னல் அல்லது நிழல் தட்டி போன்ற இடங்களில் தொங்க விட வேண்டும். சிட்டுக்குருவிகள் எங்கு தென்பட்டாலும் அவற்றிற்கு தானியங்கள் மற்றும் தண்ணீரை வழங்க வேண்டும்.சிட்டுக்குருவி ஜோடிகள் தென்பட்டால் அவற்றின் செயல்பாடுகளை, உணவு முறையை, முட்டையிடுவதை கண்காணிக்க வேண்டும். வேளாண்மைக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இருக்க, விழிப்புணர்வு முயற்சிகளையோ அல்லது சரியான அறிவுரைகளையோ வழங்க வேண்டும்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

சூடாக தேநீர்...

சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்!




“மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது’ என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவை, சர்வதேச நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
காபி, டீ மற்றும் சில வகை பானங்களை சூடாக சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர். சிலர் தான், நன்றாக சூடு ஆறிய பின் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இது ஒரு வகையில் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிகிறது.
தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ் நாட்டில் தான் காபி குடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எடுத்துக்கொண்டால், எவருமே டீ குடிப்பதை தான் விரும்புகின்றனர்.
காலையிலும் டீ குடித்தால் தான் பத்திரிகையையே படிக்க தோன்றும் சிலருக்கு; இன்னும் சிலருக்கு படுக்கையிலேயே டீ வந்தாக வேண்டும். “பெட் டீ’ குடித்தபின் தான் திருப்பள்ளியெழுச்சி நடக்கும். அந்த அளவுக்கு டீ மோகம் உள்ளது.
“காலையில் எழுந்தாலும் சரி, மற்ற நேரங்களிலும், சூடா ஒரு டீ குடித்தால் போதும்… உடல் இன்ஜினுக்கு பெட்ரோல் போட்ட மாதிரி; அப்புறம் தான் வேலையே ஓடும்’ என்று பலர் குறிப்பிடுவதை கேட்டிருப்பீர்கள்.
ஆபீசில் வேலை செய்வோரும், தொழிற் சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களும் மணிக்கொரு தரம் டீ குடித்தால் தான் சோர்வு நீங்கியது போல உணர்வர்; தம்மாத்தூண்டு டம்ளரில் கொடுத்தாலும், அதை குடித்தால் தான் சுறுசுறுப்பே வரும்.
அதிக சூடாக டீ குடிப்பதால் ஏற்படும் உடல் கோளாறு பற்றி கடந்த சில ஆண்டாக மேற்கொண்டு வந்த ஆய்வில் இந்திய நிபுணர்கள் ஆபத்தான சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வு முடிவுகளில் அவர்கள் கூறியிருக்கும் சில தகவல்கள்:

* வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது; குறிப்பிட்ட அளவில் தான் சூட்டை அது தாங்கும். அதிகமானால், அதன் சுவர் அரிக்கத் துவங்கி விடும்.
* அதிகமான சூட்டுடன் டீ குடித்தால் , உணவுக்குழாய் சுவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன; அதன் சுவர்கள் அரிக்கப்பட்டு, திசுக்கள் பலவீனம் அடைகின்றன.
* இதனால், சுவர்ப்பகுதியில் உணவுக்குழாய் கேன்சர் கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளது.
மற்றவர்களை விட, சில பழக்க வழக்கங்களை கடைபிடிப்பவர்களுக்கு கேன்சர் ஆபத்து அதிகம்.
* பான் பராக், புகையிலை போன்றவற்றை சுவைப்பவர்களுக்கு 1.1 மடங்கு கேன்சர் வாய்ப்பு அதிகம்.
* பீடி குடிப்போருக்கு 1.8 மடங்கு கேன்சர் ஆபத்து உள்ளது.
* சிகரெட் பிடிப்போருக்கு இரண்டு மடங்கு கேன்சர் அபாயம் உள்ளது.
* மது குடிப்போருக்கு கேன்சர் அபாயம் 1.8 மடங்கு.
* அதிக சூட்டுடன் டீ குடிப்போருக்கு, கேன்சர் வரும் வாய்ப்பு இவர்களை விட, நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
* வெயில் பருவத்தை விட குளிர்காலத்தில், குளிர் பிரதேசத்தில் உள்ளவர்கள் சூடாக டீ குடித்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம்.
* சூடான பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு ஓரளவு பாதிப்பு வாய்ப்பு குறைவு தான்.
இவ்வாறு ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
அதிக சூடாக டீ குடித்தால் தான் கேன்சர் வரும்; அதிக சூடாக காபி குடித்தால்…? இப்படி காபி குடிப்பவர்களுக்கு கேன்சர் வாய்ப்பு அதிகரித்ததே இல்லை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனை நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இவர்களின் ஆய்வு முடிவுகளை சர்வதேச நிபுணர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.





டாடா நிபுணர்கள்,தங்கள் ஆய்வுக்கு காஷ்மீரில் 1,500 பேரிடம் சர்வே எடுத்துள்ளனர். அவர்களில் அதிக சூடாக டீ குடிப்போருக்கு கேன்சர் ஆபத்து உள்ளதை உறுதி செய்தனர். ஆண்டுக்கு, இப்படிப்பட்டவர்களில் சராசரியாக 800 பேருக்கு கேன்சர் வருவதும் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் சர்வதேச கேன்சர் ஆராய்ச்சி இதழ், “இன்டர்நேஷனல் கேன்சர் எபிடமாலஜி’யில் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. அது சரி, நீங்கள் அதிக சூடாக டீ குடிப்பவரா? அப்படீன்னா, இனி குடிக்க மாட்டீங் கல்ல…

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

உலக சாம்பியன் இந்தியா

      இந்தியா இரண்டாவது முறையாக தனது  சொந்த  மண்ணில் இலங்கையை வீழ்த்தி  கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது.. 










சொந்த மண்ணில் உலக கோப்பை வென்று அசத்தியது இந்திய அணி. இதன் மூலம் உலக கோப்பை தொடரை நடத்திய நாடுகள் கோப்பை வென்றதில்லை என்ற கருத்தை முதல் முறையாக தகர்த்தது. இதற்கு முன் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகள் உலக கோப்பை தொடரை நடத்தின. ஆனால், அந்த அணிகளால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை. 


சனி, 2 ஏப்ரல், 2011

செயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் – திரு நள்ளாறு சனி பகவான்


           
         இன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு…என்று பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.  சில வருடங்களுக்கு முன்பு , ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள்  ஸ்தம்பித்து விடுகிறது. 3 வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது.எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.


            இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம் ? என்பதை ஆராய்ந்தது.  கிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது.  எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு- ஸ்ரீதர்ப்பணேசவரர்   கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் … தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. …ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன. 2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45 நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.அதே சமயம் , செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.





           இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால் , இந்தக் கோவில்தான் இந்துக்களால் “ சனிபகவான் ”… தலம் என்று போற்றப்படுகிறது.ஆக , இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும் , அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.  இந்த சம்பவத்திற்குப் பிறகு , நாசா விலிருந்து   பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர்.  இன்று வரையிலும் , விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன. இதைப் பற்றிய தகவல்கள் ஜூனியர் விகடனில் 2005 -06 வாக்கில் , வெளிவந்தது. நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச் சொல்லுவது இல்லை.. ?

கிரிக்கெட் ராஜதந்திரம் : பால் தாக்கரே கேள்வி..


          
     பாகிஸ்தான் பிரதமரை மொஹாலி போட்டிக்காக அழைத்த இந்தியா, இலங்கையில் வாழும் தமிழரின் நலனுக்காக, அந்நாட்டுடன் 'கிரிக்கெட் ராஜதந்திரத்தை' செயல்படுத்தாது ஏன் என்று சிவசேனை தலைவர் பால் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து சாம்னாவில் அவர் எழுதியுள்ள செய்தியில் , கிரிக்கெட் ராஜதந்திர முறையை முட்டாள்தனமானது என்று வருணித்துள்ளார்.
.


             "இந்தியாவில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியைக் காண இலங்கை அதிபர் ராஜபக்ஷே வருவதாக அறிந்தோம். அவர் அதிகாரப்பூர்மாக அழைக்கப்பட்டாரா என்பதை அறிய விரும்புகிறோம்.
அரசின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் அவர் வராத பட்சத்தில், கிரிக்கெட் ராஜதந்திரம் என்பது பாகிஸ்தானுக்கான சிறப்புச் சலுகை என்றே கருத வேண்டியதாகிறது.

இலங்கையில் வாழும் தமிழரின் நலனை மேற்கோள் காட்டி, அந்நாட்டுடன் கிரிக்கெட் ராஜதந்திரத்தை ஏன் கையாளக் கூடாது?" என்று பால் தாக்கரே கூறியுள்ளார்.


             மேலும், "இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் கவனத்தை (இஸ்லாமியர்களின் வாக்கு)  ஈர்க்கவே பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.(ஆனால் நேரடியாக ராஜபக்ஷேவை இந்தியா விற்கு அழைத்தால் தமிழ் மக்களின் மதிப்பை காங்கிரஸ் இழக்க நேரிடும்,) கிரிக்கெட்டை பயன்படுத்தி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எத்தனைப் பிரச்னைகள் தீர்க்கப்பட்டன என்பது தெரியவில்லை.
மொஹாலி ஆட்டத்தில் நல்லவேளையாக பாகிஸ்தான் அணி தோற்கடிப்பட்டது. இதனால், அந்த அணி மகாராஷ்டிர மாநிலத்துக்கு வருவது தடுக்கப்பட்டது," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




       

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

உலகின் முன்னணி பிராண்டுகளுக்கு பெயர் வைத்த கதை.

அசென்ஜெர் (accenture) 
ஆண்டெர்சன் கன்சல்டிங் என்ற நிறுவனம் தனது பெயரை மாற்ற நினைத்தபோது , அது குறித்து தனது நிறுவன ஊழியர்களிடமே கேட்டது. நார்வே நாட்டை சேர்ந்த ஊழியர் ஒருவர் "accent on the future " என்று அவர் சொல்ல, அதையே கொஞ்சம் சுருக்கி " accenture " என்று மாற்றினார்கள். 





அடிடாஸ் (adidas)
1924 ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட  
இந்த நிறுவனத்தின் உரிமையாளரான அடோல்ப் டோஸ்ளர்  (adolf dossler ) 
என்பவர் தனது பெயரின் முதல் இருபாதியை  வைத்து உருவாக்கியதுதான் இந்த பெயர். 





சிஸ்கோ (cisco )
அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ (san francisco ) நாகருடைய பெயரின் இறுதி பகுதியில்  இருந்து உருவானதுதான்  சிஸ்கோ. 





கோல்கேட் பால்மொளிவ் ( colgate palmolive )
கோல் கேட்  அண்ட் கம்பெனி , பால்மொளிவ் அங்கிர இரு நிறுவனங்கள் இணைந்து உருவானதுதான் "கோல் கேட்  பால்மொளிவ் " கோல் கேட்  நிறுவனத்தை உருவாக்கிய வில்லியம் கோல் கேட்  தனது குடும்ப பெயரான கோல் கேட்  என்ற பெயரையே தனது நிறுவனத்திற்கு வைத்துவிட்டார். 
பால்மொளிவ் என்பது சோப்பு தயாரிக்க பயன்படும் இரண்டு எண்ணெய் களான 
பாம் மற்றும் ஆலிவ் ஆகிய இரண்டையும் சேர்த்து உருவானது.. 





இன்போசிஸ் 
information systems  இதை சுருக்கிதான் உலக ஐ .டி துறையில் முன்னணியில் இருக்கும் இந்திய நிறுவனமான இன்போசிஸ் க்கு பெயர் வைத்தார்கள் .




(maggi )

நூடுல்ஸ் என்றாலே மேகி என்றால்தான் குழந்தைகளுக்கு தெரியும். அந்த அளவுக்கு இந்த பெயர் பிரபலம் .  

1947 ஆம் ஆண்டு நெஸ்லே (nestle ) நிறுவனம்  ஜூலியஸ் மேகி என்பவர் ஆரம்பித்த நிறுவனம். . அவருடைய பெயரின் கடைசி பாதியை தனது நிறுவன பொருட்களின் ஒன்றான நூடுல்ஸ் க்கு மேகி என்று பெயர் வைத்துக்கொண்டார்.    




(vodafone ) 
வாய்ஸ் டேட்டா டெலிபோன் என்பதன் சுருக்கமே இந்த பெயர். தனது முதல் மொபைல் அழைப்பை இங்கிலாந்து நாட்டில் 1985 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் ஆரம்பித்தது.....





(wipro )
வெஸ்டேர்ன் இந்தியன் பாம் ரீபைன்ட்டு ஆயில் லிமிடெட் 
(WESTERN INDIA PALM REFINED OIL LTD) 
என்பதன் சுருக்கமே WIPRO ,  இந்நிறுவனம் தொடங்கப்பட்டது 1980 இல் . ஆரம்பத்தில் இந்நிறுவனம் தயார் செய்த பொருள் வனஸ்பதி.  ஆனால் இன்றோ  சாப்ட்வேர் (SOFTWARE )உலகில் முன்னணி நிறுவனம்...