புதன், 19 ஜனவரி, 2011

அறிவுத்தகவல்கள் ...

பெங்களூர் நகர் கெம்பே கௌடாவினால் 1537 -ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது . அங்கே தான் 1905 ல் முதல் மின்சார பல்பு எரிந்தது . இன்று அதன் மக்கள் தொகை 53 லட்சம் .
  

Koalas: ஆண் கோலா கரடிகள் பகலில் உணவு உண்ணும் ஆனால் பெண் கோலா கரடிகள் இரவில்தான் உணவு உண்ணும் இவை பகல் முழுவதும் தூங்கத்தான் செய்யும். (நல்ல ஷிபிட் முறைதான்)உலகில் உள்ள எல்லா படைப்புகளிலும் ஆண்தான் பெண் உயிரினத்தைவிட பெரியதாக இருக்கும். ஆனால் இவற்றில் பெண் தான் உருவத்தில் பெரியதாக இருக்கும். 








முதலைகளால் நாக்கை அசைத்து உணவை சுவைக்கமுடியாது. முதலையின் வயிற்றில் உருவாகும் ஜீரண நீரினால் (digestive juices) சிறிய இரும்பு ஆணியை கூட ஜீரணிக்க முடியும். 








  
Basenji: ஆபிரிக்காவில் காணப்படும் இந்தவகை   நாய்கள் குரைக்காது. நாயினத்தில் குரைக்காத ஒரே இனம் இதுதான். (குரைக்காத நாய் கடிக்குமா?)







நீர்யானைகளின் பிரசவம் நீருக்கடியில் தான் நடக்கும். குட்டி பிறந்ததும் சுவாசிப்பதற்காக அடிக்கடி நீரின் மேலேவந்து செல்லும். குட்டிகளுக்கு பாலூட்டுவதும் நீருக்கடியிலேயே நடைபெறும். 

ஸ்வீகாரம் ( தத்து ) எடுக்கப்பட்ட குழந்தைக்கு ( ஆண் அல்லது பெண் ) புதிய குடும்பத்தில் சகல உரிமைகளும் உண்டு . சென்னை உயர்நீதி மன்றம் விளக்கம் .



உலகின் மிக வேகமாக ஓடும் நாயினம் Greyhound தான். இவற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர்கள். இந்த நாய்களின் தோற்றம் சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு பண்டைய எகிப்த்தில் உருவானதாக கருதப்படுகின்றது. 




Spitting cobra: இந்தவகை பாம்புகளால் தனது விஷத்தை சுமார் எட்டு அடி தூரத்திற்கு பீய்ச்சியடிக்கும் திறனுடையது. அதுவுன் நம்முடைய கண்ணை நோக்கித்தான். (ரெம்ப கவனமாத்தான் இருக்கணும்).





இரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின் பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில் உள்ள tapetum lucidum என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை உள்வாங்குவதால்தான். 

பூமியின் சராசரி உஷ்ணம் ஒரு டிகிரி உயர்ந்தால் கூட நோயால் 30 ஆயிரம் மக்கள் இறப்பார்கள் -- ஆராய்ச்சி கருத்து .





Hagfish: இந்த மீனின் பற்கள் அதன் நாக்கில்தான் இருக்கும். (இது அதிசயமே!).



Grizzly Bear, இந்த கரடியினம் குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது. 

பூனைகளால் தாடையினை (jaw) வல இட புறமாக அசைக்க முடியாது. 

Owl: ஆந்தைகளால் எலும்பு, இறகு மற்றும் விலங்குகளின் முடி போன்றவைகளை ஜீரணிக்க முடியாது. எனவே சாப்பிட்டு சில மணி நேரம் கழித்து முடி எலும்பு போன்றவற்றை சுருட்டி வாந்தி எடுத்துவிடும். (ஐயோ பாவம்….)



ஆசியா , ஐரோப்பா ஆகிய 2 கண்டங்களை இணைத்து வரும் ஒரே நகரம் இஸ்டான்புல் ( துருக்கி ) தான் போஸ்போரஸ் கால்வாய் நகரின் மத்தியில் ஓடுகிறது .

விலங்குகளிலே ஒட்டகசிவிங்கி மட்டுமே பிறக்கும் போதே தலையில் கொம்புடன் பிறக்கும். 



Kissing bugs: இந்த பூச்சிக்கு மனித இரத்தம் ரெம்ப பிடிக்கும் அதுவும் உதட்டில் உள்ள இரத்தம் தான் பிடிக்குமாம்.

உலகில் வாழும் மிகப்பெரிய பறவை ஆண் தீ கோழிகள்தான். இதன் எடை சுமார் 175 கிலோ இருக்கும். 



Japanese cranes, இந்த கொக்குகள் அதிக எடை இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே முதலில் சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க முடியும். (விமானம் போன்று)



 

Jaeger: இந்த பறவைகள் எந்த கடல் பறவைகள் கொஞ்சம் வீக்கா இருக்கோ அதனை வசமா பிடித்து தனது வாயில் என்ன உணவு இருக்கிறதோ அதனை அந்த கடல் பறவையின் வாய்க்குள் திணிக்கும். பின்னர் திணித்ததை வெளிய வாந்தி எடுக்க வைத்து கொடுமை செய்யும். (இருந்தாலும் ரெம்ப மோசம்தான்!)

திரு . என். டி. சுந்தரவடிவேலு அவர்கள் சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தின் தலைசிறந்த பொதுக்கல்வி இயக்குனராக பணியாற்றியபோது அவர் ஒருவரே இயக்குனராக விளங்கினார் . இன்று 12 இயக்குனர்கள் அவர் செய்த பணிகளை நிர்வகிக்கிறார்கள் .

Great horned owl, இந்த ஆந்தையின் உடலில் உள்ள இறகுகளை எடுத்துவிட்டு அதன் எடையை கணக்கிட்டால் அதன் இறகுகளை விட எடை குறைவாகத்தான் இருக்கும். .




 விலங்கினகளில் Cat fish க்குதான் அதிக சுவை மொட்டுகள் அதாவது 27, 000 சுவை மொட்டுகள் உண்டு. 


தெள்ளு பூச்சி (Flea) அதன் உடலின் நீளத்தை போல் சுமார் 350 மடங்கு நீளத்தை தாண்டும். அதாவது ஒருமனிதன் ஒரு கால்பந்து மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம். 


Booby: பாவம் இந்த கடல் பறவைகள் ஏனென்றால் இவை அதிக கவனமாக இருப்பதில்லை இதனால் மனிதர்கள் எளிதாக பிடித்துவிடமுடியும்.

நட்சத்திர மீனுக்கு மூளை கிடையாது. 

தீ கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். 





காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தின் கோபுரம் ஒரு பூகம்பத்தின் விளைவுகளையும் தாங்கிக் கொண்டு நிலையாக இருக்கக்கூடிய வல்லமை பெற்றதென ஆராய்ச்சி நிபுணர்கள் அறிவித்துள்ளார்கள் .


இந்தியாவை மூன்று பக்கமும் சூழ்ந்துள்ள கடற்கரை ஓரத்தின் மொத்த நீளம் 7516 கிலோமீட்டர்கள் . 

Bald Eagle, இந்த பருந்துகளின் கூடுகள் தான் உலகிலே மிகப்பெரிய பறவை கூடுகளாகும். இவை சுமார் 2 மீட்டர் நீளமும் மீட்டர் 3 ஆழமும் இருக்கும். 



Green Herons: இந்த பறவைகள் அதி புத்திசாலியானது. சின்ன வண்டுகள் அல்லது பூச்சிகளை தண்ணீரின் மீது போடும் மீன்கள் இரைதான் என்று மேல வந்தால் அவ்வளவுதான் ஒரு வினாடிக்குள் இதன் வாய்க்குள் போய்விடவேண்டியதுதான். .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.